பொரியரிசி உருண்டை



இது குழந்தைகளுக்குச் சட்டென்று செய்துதரக்கூடிய சுவையான ஒரு பலகாரம். கொஞ்சம் சாப்பிட்டாலும் வயிறு நிறைந்ததுபோலிருக்கும்.

தேவையான பொருட்கள்

புழுங்கலரிசி - 1 கப்

காய்ச்சிய பால் - 1 கப்

சர்க்கரை- தேவைக்கேற்ப

செய்முறை

வெறும் வாணலியில், அரிசியைப்போட்டு, சிறுதீயில் வைத்துப் பதமாக வறுத்து எடுத்துக்கணும்.

வறுத்தெடுத்த அரிசியை ஆறவிட்டு மிக்சியில் நைசாகப் பொடிபண்ணிக்கோங்க.

பொடியாக்கிய மாவில் தேவையான சர்க்கரை கலந்து, வெதுவெதுப்பான பாலை ஊற்றிப் பிசைந்து, உருண்டைகளாகப் பிடிச்சுக்கோங்க.

சுவையான பொரியரிசி உருண்டை தயார். இதைக் குழந்தைகளுக்கு பள்ளி விட்டு வந்ததும் மாலை நேர டிபனாகச் செய்து தரலாம்.

*************************

கருத்துகள்

  1. வருகைக்கும் கருத்துக்கும்

    நன்றிகள் ஆசியா!

    நன்றிகள் நித்திலம்!

    பதிலளிநீக்கு
  2. பொரிஅரிசி உருண்டை முன்பு அடிக்கடி செய்வேன் குழந்தைகள் வீட்டில் இருக்கும் போது. அந்த நாள் நினைவு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!