பக்ரீத் சமையல் - பிர்னி | அரிசிப் பாயசம்


போன ஈத் பெருநாளுக்கு தோழியின் வீட்டுக்குப் போயிருந்தோம். பிரியாணியும் பிர்னியும் இல்லாம எங்க வீடுகளில் விருந்தே கிடையாதுன்னு சொன்ன தோழியிடம், கேட்டு வாங்கிய சமையல் குறிப்பு இது. ரொம்ப சுலபமானதும்கூட. ஒருமுறை செய்துபார்த்தேன், சூப்பராக வந்தது. நீங்களும் உங்க வீட்டில் செய்து சாப்பிட்டுப் பாருங்க.

பிர்னிக்குத் தேவையான பொருட்கள்...

பாஸ்மதி அரிசி - 1/2 கப்

சர்க்கரை - 1 கப்

பால் - 1 லிட்டர்

பாதாம், பிஸ்தா - தலா 15 

ஏலக்காய் - 5

குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை

அரிசியை ஊறவைத்து, நைசா அரைச்சு வச்சுக்கோங்க.

பாதாம் பிஸ்தா பருப்புகளைத் தோல்நீக்கி, மெலிசா சீவி வச்சுக்கோங்க. ( இங்க அது ரெடிமேடாவே கிடைக்குது.)

அரைத்த அரிசியை, கால் லிட்டர் பாலில் கரைச்சு வச்சுக்கோங்க.

குங்குமப்பூவை ரெண்டு டேபிள்ஸ்பூன் பாலில் கரைச்சு வையுங்க.

ஏலக்காயையும் பொடியாக்கி வச்சுக்கோங்க.

அடி கனமான பாத்திரத்தில், முக்கால் லிட்டர் பாலை ஊற்றி கொதிக்கவையுங்க.

பால் கொதிக்கும்போது அரிசி மாவுக் கலவையை அதில் ஊற்றி, சிறுதீயில் வைத்து, கட்டிகள் இல்லாமல் கிண்டுங்க.

கெட்டியாகி வருகிற சமயத்தில் சர்க்கரையைச் சேர்த்து, இன்னும் இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாகக் கிளறிவிட்டு, அதில் பாலில் கரைத்த குங்குமப்பூவையும், ஏலக்காய்ப் பொடியையும் சேருங்க.

நன்கு கெட்டியானதும் இறக்கி, ஆறவிட்டு, ஃபிரிட்ஜில் குளிரவிட்டு, துண்டுகளாக்கி ஜில்லுன்னு பரிமாறுங்க.

சூப்பரான பிர்னி தயார்.

குறிப்பு : இனிப்பு அதிகமாகத் தேவைப்பட்டால் இன்னும் ஒரு கால் கப் சர்க்கரை கூடச் சேர்த்துக்கொள்ளலாம்.

                                         **************

கருத்துகள்