மீன் குழம்பும் பொரித்த மீனும்

திரு நெல்வேலி மாவட்டத்து செய்முறையில் சுவையான சீலாமீன் குழம்பும் பொரித்த மீனும்.



தேவையான பொருட்கள்

மீன் - 1 கிலோ
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
கத்தரிக்காய் - 1
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 3 பல்
புளி - சிறு எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1  தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி

தாளிக்க

சின்ன வெங்காயம் 3
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
கறிவேப்பிலை = 10 இலைகள்
எண்ணெய் - தேவையான அளவு

மீன் பொரிக்க

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
வத்தல் தூள் - 1  தேக்கரண்டி
சாம்பார்ப்பொடி - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க

செய்முறை

மீனை சுத்தம் செய்து, குழம்புக்கும் பொரிக்கவும் தனியாகப் பிரித்து வைக்கவும். குழம்புக்குரிய மீனில் சிறிது உப்புத் தூவி வைக்கவும்.

பொரிப்பதற்கான மசாலாக்களை உப்பு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேவையான தண்ணீருடன் கலந்து மீன் துண்டுகளில் தடவி ஊற விடவும்.

தேங்காயை சீரகத்துடன் அரைத்து அத்துடன், சின்ன வெங்காயம் மற்றும் 1/2 தக்காளியையும் சேர்த்து அரைத்துவைக்கவும்.

குழம்புக்கு, பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, நறுக்கிய சிறிய வெங்காயம் சேர்த்துப் பொரிய விடவும். வெங்காயம் சிவந்ததும் வெந்தயம், கடுகு,
கறிவேப்பிலை சிறிதளவு பெருங்காயம்  சேர்த்துத் தாளிக்கவும்,

அத்துடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும். சிறிதளவு உப்பு சேர்த்துத் தக்காளியை வதக்கவும். தக்காளியை வதக்கியதும்
நறுக்கிய பூண்டு, ஒரு கீறிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் புளித்தண்ணீர் மற்றும் மசாலாப் பொடிகளைச் சேர்க்கவும்.

சிறிது நேரம் மூடியிட்டுக் கொதிக்க விடவும்.

மசாலா வாசனை நீங்கியதும், அரைத்த தேங்காய், சீரகம், தக்காளி,  வெங்காயக் கலவையைச் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் கழித்து மீன் துண்டுகளைச் சேர்க்கவும்.

மீன் துண்டுகள் வெந்து குழம்பு கொதித்துக் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

மீன் பொரிக்க...

அகலமான வாணலியில் அல்லது தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி,
மீன் துண்டுகளை இரு புறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

சுவையான மீன் குழம்பு, பொரித்த மீன் தயார்!

                                            *******

கருத்துகள்