காய்கறி சால்னா | பரோட்டா சால்னா



தேவையான பொருட்கள்

தக்காளி  - 2
வெங்காயம் பெரியது - 1
பச்சை மிளகாய் -2
கேரட் - 1
கொத்துமல்லி இலை - 1/2 கப்
புதினா - 1/4 கப்
கறிவேப்பிலை - 5 இணுக்கு
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக் கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
வத்தல் பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 2 தேக்கரண்டி
கரம் மசாலப் பொடி - 1/2 தேக்கரண்டி

அரைக்க

தேங்காய் - 1/2 கப்
முந்திரிப் பருப்பு - 10 - 15
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி

தாளிக்க

பட்டை - 1 அங்குலத் துண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் 3

எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி

செய்முறை

தக்காளி வெங்காயத்தை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.

கேரட்டை சற்று நீள நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

மிளகாயைக் கீறி வைத்துக்கொள்ளவும்.

கொத்துமல்லி, புதினா, கறிவேப்பிலையை சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்

அரைக்கவேண்டிய பொருட்களைத் தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இஞ்சி பூண்டை இடித்து வைத்துக்கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும்.

அத்துடன் நறுக்கிய வெங்காயம் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.

அத்துடன் இலைகளையும் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.

அத்துடன் கேரட்டைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் நறுக்கிய தக்காளிகளைச் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியதும், மஞ்சள், மிளகாய், மல்லி, மற்றும் கரம் மசாலாப் பொடிகளைச் சேர்த்து வதக்கவும்.

ஒரு கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடங்கள் மூடி வேகவிடவும்.

பின்னர் அத்துடன் அரைத்துவைத்த தேங்காய்க் கலவையை ஊற்றி, மேலும் இரண்டு கப் நீர் சேர்த்து மூடிவைத்து பச்சை வாசனை போகுமளவுக்கு வேகவிடவும்.

அதன் பின், உப்பு சரிபார்த்துவிட்டு, 15 - 20 நிமிடங்கள் பாத்திரத்தில் கரண்டியுடன் மூடிபோட்டு சிறுதீயில் கொதிக்கவிடவும்.

குழம்பு கொதித்து, எண்ணெய் பிரியும் சமயத்தில் சிறிது கொத்துமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

அருமையான ரோட்டுக்கடை காய்கறி சால்னா தயார்.

இது, பரோட்டா, சப்பாத்தி, பூரி, இடியப்பம், ஆப்பம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

முழுமையான வீடியோ செய்முறை

இங்கே...

******


கருத்துகள்