வழக்கமாகச் சேர்க்கும் இஞ்சி பூண்டு, கரம் மசாலா இல்லாமல் மிக எளிமையான முறையில் தயாரிக்கப்படும் மிகச் சுவையான கிராமத்துமுறை உருளைக்கிழங்கு குருமா... சாதத்துடனும் சப்பாத்தி பூரியுடனும் சேர்த்துச் சாப்பிட ஏற்றது.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
வறுத்து அரைக்க...
அரிசி - 1/2 தேக்கரண்டி
சோம்பு / பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
&
தேங்காய் - 1/2 கப் ( வறுக்கத் தேவையில்லை)
தாளிக்க...
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சோம்பு / பெருஞ்சீரகம் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 இணுக்கு
செய்முறை
* உருளைக்கிழங்கை வேகவைத்து, நறுக்கி வைக்கவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
* சோம்பு பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து, சிறிது நேரம் மூடிவைத்து வேகவிடவும்.
* தக்காளி நன்கு குழைந்தபின், மஞ்சள் தூள் மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
* கலவை கொதித்து, பச்சை வாசனை போனபின், வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்க்கவும்.
* உப்பு சரிபார்த்தபின், மூன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.
* அருமையான, கிராமத்து முறை உருளைக்கிழங்கு குருமா தயார்!
******
கருத்துகள்
கருத்துரையிடுக
திண்ணைக்கு வந்த அனைவருக்கும் என் அன்பான வரவேற்புகள்!!!